/* */

துரைமுருகன் திடீரென கைது: அவதூறு பேச்சால் எழுந்தது சிக்கல்

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய புகாரில், யு டியூபர், துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

துரைமுருகன் திடீரென கைது: அவதூறு பேச்சால் எழுந்தது சிக்கல்
X

யூடியூபர் துரைமுருகன்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில், ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாடம் நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து, இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வர் குறித்தும், அரசு குறித்தும் மிக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில், ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு சாட்டை துரைமுருகன் நெல்லை வழியாக சென்றபோது , நள்ளிரவு மாநகர போலீசாரால் நெல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், நெல்லை மாநகர போலீசார் சாட்டை துரைமுருகனை, முறைப்படி தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து தக்கலை போலீசார் பத்மநாபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீன தயாளன் முன்பு ஆஜர்படுத்தினர்; அவரை வரும் 25-ஆம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்படடார்.

யூடியூபர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு பொது மேடைகளில் பேசி வருகிறார். குறிப்பாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் பேசி, கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து