/* */

நெல்லை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தோணிதுறையில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

HIGHLIGHTS

நெல்லை அருகே ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

பைல் படம்.

நெல்லையை அடுத்த தோணித்துறை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம் நொச்சிகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(36) என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டோவில் தோணித்துறை பஸ் ஸ்டாப்பில் வைத்து ஆட்களை ஏற்றும் போது சீவலப்பேரி சேர்ந்த சண்முகதுரை(21), என்பவர் அவரது ஆட்டோவுடன் சென்று செல்வகுமார் ஆட்டோவிற்கு முன்நிறுத்தி செல்வகுமாரை பார்த்து நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என்று அவதூறாக பேசி அருகில் கிடந்த மண் வெட்டியால் தாக்கும் போது செல்வகுமார் தடுத்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் நீ எப்படி வெளியூர் ஸ்டாண்டில் இருந்து கொண்டு நான் எடுக்கும் ரெகுலர் ஆட்களை எப்படி ஏற்றலாம் என சொல்லி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து செல்வகுமார் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ் விசாரணை மேற்கொண்டு செல்வகுமாரை தாக்கிய சண்முகதுரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 27 Oct 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது