/* */

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு பணி தீவிரம்

திருமலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளம் காரணமாக கீழே வர முடியாமல் தவிப்பு. மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்.

HIGHLIGHTS

திருமலை காேவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்பு பணி தீவிரம்
X

திருமலை நம்பி கோவிலில் வெள்ளம் காரணமாக சிக்கி தவித்த பக்தர்களை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவலர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு புரட்டாசி கடைசி சனி கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சென்ற நிலையில் வெள்ளம் காரணமாக பக்தர்கள் சிக்கி தவிப்பு. தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவலர்கள் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறை ஆரம்பித்தால் நேற்று முன் தினம் பக்தர்கள் கோவிலுக்கு செல்லுவதற்கு அனுமதி வழங்கியது.

இன்நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

கடந்த சில தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் தொடர்ந்த மழை பெய்து வருகிறது. இன்று காலை வழக்கிற்கு அதிகமாக மழை பெய்து வருவதால் அதிகாலை மலை நம்பிகோவிலுக்கு சென்ற பக்தர்கள் இப்பகுதி நம்பியாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரை பாலம் முழுவதும் முழ்கியது. இதனால் கோவிலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளம் காரணமாக வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பகுதிக்கு தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  3. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  5. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  6. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  8. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு