அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.
X

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களை தனித்து வெற்றிப் பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைப் பிடித்தது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஒரு கவுன்சிலர் பதவியை கூட பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது வார்டு ஆகாஷ், 3வது வார்டு கஸ்தூரி, 4வது வார்டு சுடலைமுத்து, 5வது வார்டு ஞானக்கனி, 6வது வார்டு சரஸ்வதி, ஏழாவது வார்டு ராமலட்சுமி,எட்டாவது வார்டு இசக்கியம்மாள், ஒன்பதாவது வார்டு சிவனு பாண்டியன் ஆகிய எட்டு திமுகவினர் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களும், 1வது வார்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாரியம்மாளும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags

Next Story
application of ai in agriculture