/* */

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட சோலார் படகு வாங்கியதிலும், பாபநாசம் கயல் பூங்கா அமைத்ததிலும் கோடிக்கணக்கில் பணம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

HIGHLIGHTS

முண்டந்துறை புலிகள்  காப்பகத்தில்  முறைகேட்டில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

முண்டந்துறை புலிகள் காப்பகம்.

நெல்லை:முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தொடரும் முறைகேடுகள் நடவடிக்கை எடுக்க வன உயிரினஆர்வலர்கள் கோரிக்கை.முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு சரகபகுதிகளில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக மணிமுத்தாறு அணையில் விட வனத்துறைசார்பில் 60 லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட சோலார் படகு சோதனை ஒட்டத்துடன் நிறுத்தப்பட்டது. படகு சோதனையின் போதே அணையின் நடுப்பகுதியில் பழுதாகிவிட்டது.

படகுவாங்கி ஒருவருடமாக அணைபகுதியில் பராமரிப்பு இன்றி நிறுத்தி வைத்தது மட்டுமல்லாது, அதிகவிலை கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுபோல் பாபநாசத்தில் அமைக்கப்பட்ட கயல் பூங்காவிலும் முறைகேடு என பல வழிகளில் அரசு பணத்தை முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் வீணடித்துள்ளனர்.

முறையான விசாரணை நடைபெற்றால் பல அதிகாரிகள் இதில் சிக்குவார்கள். தற்போதைய அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள். இதுபற்றி வனத்துறையின் கருத்தை கேட்க பல முறை சென்றபோது அதிகாரி இல்லை. இப்போது நெல்லை அதிகாரிதான் பொறுப்பு. அவர் பீல்டுக்கு போயிருக்கிறார். அதனால் செல் போன் சிக்னல் கிடைக்காது என்ற பதில்கள் தான் கிடைத்தன. நடவடிக்கை எடுக்குமா, தமிழக அரசு?

Updated On: 9 July 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு