சேரன்மகாதேவியில் திமுக ஆலோசனை கூட்டம்: மாற்றுக்கட்சியினர் ஐக்கியம்

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர்.

நெல்லை மாவட்டத்தில், தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுதலின்படி, சேரன்மகாதேவி ஒன்றியத்தில், 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, பூங்கோதை குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக, பொட்டல் பகுதியில் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த பழனி எம்.எல்.ஏ முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த முத்து, சொரிமுத்து, மாதவன், மதிமுகவை சேர்ந்த செல்லத்துரை, நாம் தமிழர்,கட்சியை சேர்ந்த சைமன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி (ஏ)பிரபு, சேரை ஒன்றிய துணை செயலாளர் சிவலமுத்து (ஏ) குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், அம்பை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அண்ணாதுரை, பொட்டல் கிளை செயலாளர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture