/* */

உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

உ.பி. சம்பவத்தை கண்டித்து திருச்சி விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
X

உ.பி.யில் நடந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலின் பேரில் அவர் மகன் கூட்டத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றியதில் 8 விவசாயிகள் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். அவரையும், அவரின் மகன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மனித மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 4 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  2. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  3. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  4. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  5. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  7. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  8. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  9. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  10. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்