/* */

திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு, தலா 30 முட்டைகள் அமைச்சர் வழங்கல்

திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு தலா 30 முட்டைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்கள் 3000 பேருக்கு, தலா 30 முட்டைகள் அமைச்சர் வழங்கல்
X

திருச்சி மாநகராட்சி முன் கள பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். அருகில்  எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர்

தமிழகத்தில் கொரானோ நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நோய் தொற்றை தடுக்கும் வகையில் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி தூய்மை பணியாளர்களான முன் கள பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நிரந்தர மற்றும் தற்காலிக முன் களப்பணியாளர்கள் 3000 பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 30 முட்டைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி மற்றும் மாநகராட்சி அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 10 Jun 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  6. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  7. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  9. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  10. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு