Begin typing your search above and press return to search.
திருச்சி மாவட்டத்தில் 823 பேருக்கு கொரோனா, 11 பேர் இறப்பு
திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 11 பேர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருப்பினும் மக்கள் அலட்சியம் காட்டி வருவதால் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்.659 பேர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும்11 கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.