/* */

திருச்சியில் மாயமான தனியார் வங்கி பெண் ஊழியர்

திருச்சியில் தனியார் வங்கி பெண் ஊழியர் மாயமானது பற்றி உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் மாயமான தனியார் வங்கி பெண் ஊழியர்
X

திருச்சியில் காணாமல் போன தனியார் வங்கி பெண் ஊழியர்

திருச்சி வயலூர் சாலை சண்முகா நகர் 15-வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் ரேஷ்மா (வயது 23).

இவர் தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல காலையில் வேலைக்கு சென்றவர் மீண்டும் மாலை வீடு திரும்ப வில்லை. இது குறித்து ரேஷ்மாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், உறையூர் போலீசில் ரேஷ்மாவின் தாயார் ஷாமா புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து மாயமான ரேஷ்மாவை தேடி வந்தார். இதற்கிடையே ரேஷ்மா, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பெல்ஜோராஜ் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததும் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

அவர்களை மீட்டு வர உறையூர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Updated On: 21 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!