/* */

திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம்

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு 14 வகையான மூலிகை, கங்கை, காவிரி நீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் மன்னர்  பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம்
X

திருச்சியில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் 14 வகையான மூலிகை மற்றும் கங்கை, காவிரி நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்தியாளரிடம் கூறும்போது முத்தரையர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த அபிஷேகம் நடைபெற்றுள்ளது. தலைமை தபால் நிலையத்தில் இருந்து கோர்ட்டு ரவுண்டானா வரை உயர்மட்ட பாலம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. பாலம் வந்தால் முத்தரையர் சிலை அங்கேயே இருக்க வேண்டும். அதை அகற்ற முயன்றால் ஆயிரம் உயிர்கள் பலி கொடுக்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக முதல் அமைச்சரை நேரில் சந்திக்க தயாராக இருக்கிறோம். 1300 வருடத்திற்கு முன்பு ஆண்ட பெரும்பிடுகு மன்னரை நினைவு கூறும் வகையில் 130 அடி உயர சிலையை தமிழக அரசு அமைத்து தரவேண்டும் என்றார்.

அபிஷேகம் நடத்துவதற்கு முன் புனித நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் மஞ்சள் உடை உடுத்தி காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க திருவிழா போன்று பேரணியாக வந்தனர்.

Updated On: 3 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு