/* */

திருச்சி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கொரோனா சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி அரசு  மருத்துவமனையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு
X

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 794 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 766 படுக்கைகள் முழுவதும் நிரப்பட்டுள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்,

ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 157 உள்ளது.அதை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 4000 முதல் 5000 மாதிரிகள் எடுக்கப்படுகிறது.மாவட்டத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.ரெம்டெசிவர் மருந்தும் அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவில் தரம் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அது குறித்து டீன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.நோயாளிகளுக்கு எந்த வித அசெளவகரியம் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

Updated On: 9 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...