/* */

திருச்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு

திருச்சியில் நடந்து வரும் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள்,வரத்து வாய்க்கால்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் உள்ள தடைகளை அகற்றி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அவற்றை தூர்வார வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாபெரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52 -வது வார்டு வயலூர் சாலையில் உள்ள கத்தரிக்காய் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும்பணி இன்று நடைபெற்றது.

பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் நடைபெற்ற இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி, பொறியாளர் சிவபாதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 21 Sep 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு