/* */

திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம்

திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் சிலைகளை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம்
X

திருச்சியில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடந்தது.

திருச்சி அருண் ஓட்டலில் அகில பாரத மக்கள் கட்சி கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமநாதன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன், திருவாரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சரவண சத்யா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் குரு சங்கர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மதுரை மாவட்ட தலைவர் சக்தி, கரூர் மாவட்ட மகளிரணி தலைவர் அபிராமி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சரவணன், கார்த்திக் மற்றும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஆனால் அனைத்து பெருமாள் கோயில்களும் மூடி உள்ள நிலையில் சாராயக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து நாட்களிலும் திருக்கோயில்கள் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

தமிழகத்தில் பிரிவினைவாதம் ஒழிய சமத்துவபுரம் மற்றும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள ஈவெரா பெரியார் சிலையை அகற்றிவிட்டு அந்த இடங்களில் ராமானுஜர், திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ரவி முன்னாள் காவல்துறை உயரதிகாரி என அவர் பதவி ஏற்கும் முன்பே எதிர்ப்பு தெரிவிக்கும் திருமாவளவன், கே.எஸ்.அழகிரி இவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். திருடனுக்கு தான் காவல்துறை அதிகாரியை கண்டால் அச்சம் ஏற்படும்.

பஞ்சாபின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றவுடன் பஞ்சாப் முதல்வர் ராஜினாமா செய்து உள்ளார். அதே செய்தி தமிழ்நாட்டிலும் வரும். தமிழகத்தில் இந்து ஓட்டுவங்கி உருவாகிக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 21 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்