/* */

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை

திருச்சியில் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது,

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
X

பைல் படம்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் படி திருச்சி மாவட்டத்தில் நேற்று மாநகர் பகுதியில் 126 இடங்களிலும், புறநகர் பகுதியில் 505 இடங்களிலும் என மொத்தம் 631 இடங்களில் கொரோனா மாபெரும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த முகாம்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொய்வின்றி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை திருச்சி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அருங்காட்சியக இயக்குனருமான எஸ். வி. ராமன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் மாவட்ட கலெக்டர் சிவராசு கூறுகையில் 'திருச்சி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது .இதன் மூலம் தமிழக அளவில் ஒரே நாளில் அதிக அளவில் ஊசி போட்ட சுகாதார மாவட்டங்கள் பட்டியலில் 4-ம் இடத்தை திருச்சி மாவட்டம் பிடித்து சாதனை படைத்து உள்ளது' என்றார்

Updated On: 13 Sep 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை