/* */

எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர் சிவராசு தகவல்

எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணைய வழியாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர் சிவராசு தகவல்
X

பைல் படம்

பாரத ஸ்டேட் வங்கி ( STATE BANK OF INDIA ) - ன் பல்வேறு பணிக் காலியிட அறிவிப்புகள் விளம்பர அறிவிப்பு 676001 : CRPD / CR / 2021-22 / 09-601 வாயிலாக வெளியிடப்பட்டது.

இப்பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வழியாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 22.05.2021 முதல் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இலவச பயிற்சி வகுப்பு சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் உருவாக்கப்பட்ட sbiemptrichy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் .

அவ்வாறு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேற்காணும் மின்னஞ்சலுக்கு தாங்கள் SBI பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், கைபேசி எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற தகவல்களை அளித்து இவ்விணையதள இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jun 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு