/* */

திருச்சி மலைக்கோட்டை கோயில்-அமைச்சர் நிகழ்ச்சி ரத்தானதால் பரபரப்பு

திருச்சி மலைக்கோட்டை கோயில் அமைச்சர் நிகழ்ச்சி ரத்தானதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மலைக்கோட்டை கோயில்-அமைச்சர்  நிகழ்ச்சி ரத்தானதால் பரபரப்பு
X
அமைச்சர் ஆய்விற்கு வராததால் திருச்சி மலைக்கோட்டை கோயில் யானை திரும்ப அழைத்து செல்லப்பட்டது.

இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்சி சமயபுரம் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் கோயில் , மலைக்கோட்டை கோயில் யானை பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி அலங்காரம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலை துறை அமைச்சரை நேரில் சந்தித்து அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் ஜி தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ராணி மங்கம்மாள் சொந்தமான இடத்தை கார்மல் சர்ச் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை மீட்கக்கோரி மனு அளிக்க காத்து இருந்தனர் . மலைக்கோட்டை கோயில் சார்பிலும் நாகநாதசுவாமி கோவில் அருகில் அமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால் அமைச்சர் சேகர்பாபு திருவானைக்காவல், சமயபுரம் கோயில்களை ஆய்வு செய்து விட்டு மலைக்கோட்டை கோயில் ஆய்விற்கு வரவில்லை. இதனால் யானை லட்சுமி அங்கிருந்து அது தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. மனு கொடுப்பதற்காக காத்திருந்தவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தரப்பில் அமைச்சர் விமானத்தில் செல்ல நேரம் ஆனதால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 14 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!