திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

திருச்சியில் நடந்த விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அயிலை சிவசூரியன் பேசினார்.
திருச்சி மாவட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் நடந்தது.
குழு தலைவர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் வருகின்ற 27ம் தேதி அறிவித்துள்ள பாரத் பந்த்தை யொட்டி அது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மக்கள் அதிகாரம் லே.செழியன்~ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.சி.பாண்டியன்,தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் கணேசன்,தியாகராஜன்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தங்க துரை,மக்கள் உரிமை கூட்டணி ஜோசப்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பழனிச்சாமி,ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சம்சுதீன்~ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu