/* */

ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் கோலாகலம் தங்க குடத்தில் புனித நீர் சுமந்து வந்த யானை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் தங்கக்குடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில் தூக்கியும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் கோலாகலம்  தங்க குடத்தில் புனித நீர் சுமந்து வந்த யானை
X

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தங்ககுடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில் தூக்கியும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் தங்கக்குடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில் தூக்கியும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருமேனி கவசங்கள், திருவாபரணங்கள் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதிலிருந்த சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தைலகாப்பு மூலவர் ரெங்கநாத பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்ட.து.

48 நாட்கள் கழித்து தைலம் உலர்ந்த பின் தான் ரெங்கநாத பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.




Updated On: 24 Jun 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...