/* */

இஸ்லாமியர்கள் படுகொலை; பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்

அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

இஸ்லாமியர்கள் படுகொலை;  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்
X

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக்கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்.

அசாமில் இஸ்லாமியர்களை குறிவைத்து படுகொலை செய்வதை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாலக்கரை ரவுண்டானாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் பைஜி, கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை விளக்கியும், அசாம் அரசை கண்டித்து உரையாற்றினார். மேலும் மாவட்ட செயலாளர் அப்சல் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பகுதி செயலாளர் அப்துல்லாஹ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...