திருச்சி தேசியக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி தேசியக் கல்லூரியில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் பங்கேற்றவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி:

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி தேசியக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற 400 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future