/* */

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியார் பிறந்த நாளான இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் பிறந்த நாளை, சமூக நீதி நாளாக அறிவித்து அவரது பிறந்த நாளில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று தந்தை பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, மலர் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்தார்.

அதை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மீண்டும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீத்தா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் தமிழ்கனி,சிவசுப்பிரமணியம்பிள்ளை மற்றும் துணை ஆட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!