/* */

திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது

திருச்சியில் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட அசாருதீன்.

திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை இளைஞர் ஒருவர் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட முயற்சி செய்தவர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் நடந்து வந்து ஏடிஎம்மில் உள்ள இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த இளைஞர் அசாருதீன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாலிபர் அசாருதீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது