/* */

மோசடி வழக்கில் தலைமறைவான வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் தலைமறைவான ராமநாதபுரம் வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மோசடி வழக்கில் தலைமறைவான வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது
X

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையில், தேடப்பட்டு வரும் குற்றவாளி (எல்.ஓ.சி) என ஒருவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல் ஆயக்குடி யாதவர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் மீது கடந்த 2019-ல் ராமநாதபுரம் மாவட்ட எமனேஸ்வரம் காவல் நிலைய போலீசார் மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென தலைமறைவானதும், தேடப்படும் குற்றவாளி என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அனைத்து விமான நிலையங்களுக்கும் எல்.ஓ.சி. எனப்படும் நோட்டீஸ் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து எமனேஸ்வரம் போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருச்சி வந்த போலீசார் வேல்முருகனை கைது செய்து அழைத்து சென்றனர்.

Updated On: 27 Feb 2022 11:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது