/* */

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி

திருச்சி கோட்டை பகுதியில் தனிமையில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இறந்து கிடந்த தொழிலாளி
X
திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி கீழ தேவதானத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி மற்றும் பிள்ளைகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளப்பட்டிக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் செல்வக்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்று விட்டு சுமார் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். அதன் பிறகு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று (08.12.2021) மதியம் அருகில் வசிக்கும் சிறுவன் ஒருவன் செல்வக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால்,பூட்டு போடாமல் சாத்தியிருந்த கதவை திறந்து பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் உள்ள உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது செல்வக்குமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடத்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  2. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  4. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க