திருச்சியில் போலீஸ் ஆதிக்கம் எதற்காக?

திருச்சியில் போலீஸ் ஆதிக்கம் எதற்காக?
X
போலீஸ் ஆதிக்கம் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டை பகுதியில் போலீசார் மக்களை தேடி சென்றனர்.
திருச்சி மாநகர பகுதியில் போலீஸ் ஆதிக்கம் எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றங்கள் நடைபெறா வண்ணம் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும், குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தும் வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, சமுதாய குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை, அந்தந்த காவல் சரக உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் சந்தித்து, போலீசார் ஆதிக்கம் செய்து மற்ற குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத வகையில்,அது தொடர்பான சமுதாய குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் அவர்களிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களிடம் நிலவி வரும் சூழ்நிலைகள் தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டுஅவர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாநகர போலீசார் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும்போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரை வழங்கினார்.

அதன் பேரில் இன்று திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட நடுகொண்டையம்பேட்டை,தேவதானம், ஓயாமரி ஆகிய பகுதிகளில் ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலும், கண்டோன்மெண்ட் சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட மத்திய பஸ்நிலையம் மற்றும் வ.உ.சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்டோன்மெண்ட் சரக போலீஸ்உதவி கமிஷனர் தலைமையிலும், கே.கே.நகர் சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட எல்.ஐ.சி.காலனி, தென்றல் நகர், கே.கே.நகர் பஸ் நிறுத்தம் மற்றும் மிலிட்டரி கிரவுண்ட்பகுதியில் கே.கே.நகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலும், பொன்மலைசரக போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியான கம்பிகேட், தங்கேஸ்வரிநகர்,அரியமங்கலம் லெட்சுமிபுரம் பகுதிகளில் பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர்தலைமையிலும், காந்திமார்க்கெட் சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட வரகனேரி, விஸ்வாஸ்நகர், கீரைக்கடை பஜார், எடத்தெரு, சங்கிலியாண்டபுரம், காஜாபேட்டை மற்றும் முதலியார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காந்தி மார்க்கெட் சரக போலீஸ் உதவிகமிஷனர் தலைமையிலும் மற்றும் தில்லைநகர் சரக போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு,டாக்கர்ரோடு, மகாத்மாகாந்தி பள்ளி சந்திப்பு, தென்னூர் உள்ளிட்ட பகுதிகளில்தில்லைநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலும், அந்தந்த சரக போலீசார் அந்தந்தபகுதிகளில் பகுதி ஆதிக்கம் செய்து பொதுமக்களை சந்தித்துஅந்த பகுதியில் உள்ள குறைகள், குற்ற சம்பவங்கள், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர். பொதுமக்கள் போலீசாரிடம் பகுதி ஆதிக்கம் செலுத்தும் போது,ரவுடிகளின் ஆதிக்கம் குறையும் என்றும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாது என்றும்,போலீசார் தினமும் வரவேண்டும் என்று கூறினார்கள்.

இது போன்று, திருச்சி மாநகரில் சமுதாய குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, கண்டறியப்பட்ட இடங்களில், தினசரி அந்தந்த போலீஸ் உதவிகமிஷனர்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், போலீசார்கள் சம்பந்தப்பட்டபோலீஸ் எல்லைக்குட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடல் செய்து, அந்த பகுதியில் வசித்து வரும் குறிப்பிட்ட தரப்பினரோ? அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரோ? ஆதிக்கம் ஏதும்செலுத்தாத வகையில் போலீசாரால் ஆதிக்கம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்தெரிவித்துள்ளார்.

Tags

Next Story