/* */

ஓ.பி.எஸ்.சின் பின்னணியில் இருப்பது யார்? அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பகீர்

ஓ.பி.எஸ்.சின் பின்னணியில் இருப்பது யார்? என்பது பற்றி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பகீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

HIGHLIGHTS

ஓ.பி.எஸ்.சின் பின்னணியில் இருப்பது யார்? அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பகீர்
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியில் மொத்தமுள்ள 75 மாவட்ட செயலாளர்களில் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். இது தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வு. அதன் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமைக்கு தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் விருப்பப்படி தேர்வு செய்யப்பட இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க‌ டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலாவின் பின்னணியில்தான் செயல்பட்டு வருகிறார். அவர்களை நம்பி தான் அரசியல் செய்கிறார். அதனால்தான் அவருக்கு தொண்டர்களின் ஆதரவு இல்லை என்றார்.

Updated On: 27 Jun 2022 6:26 AM GMT

Related News