/* */

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் 4 நாளில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் 4 நாளில் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் 4 நாளில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு
X

பைல் படம்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து காஜாமலை வழியாக முள்ளிப்பட்டி வரை சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.இதனையொட்டி திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் வீடுகள் கட்டி இருப்பவர்கள் ஆக்கிரமிப்புகளை நான்கு நாட்களில் அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஆக்கிரமிப்பு அதற்கான கட்டணம் முழுவதும் அவர்களிடமே வசூல் செய்யப்படும் இது இறுதி எச்சரிக்கை என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். காஜாமலை மெயின் ரோடு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிப்பதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பது காஜாமலை மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 May 2022 5:01 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  2. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  3. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!