நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. விருப்ப மனு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனுஅளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வருகின்ற 24-112021 முதல் 30-11-2021 வரை காலை 10-00 மணி முதல் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வி.என்.நகர், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது.

போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் விண்ணப்ப படிவத்தை ரூ-10/- மட்டும் செலுத்தி மாவட்ட அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழே குறிப்பிட்டுள்ள கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் 30-11-2021 அன்று மாலை 5-00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கட்டண விபரம்-மாமன்ற உறுப்பினர்-ரூ 10,000/- நகர்மன்ற உறுப்பினர் ரூ 5000/- பேரூராட்சி உறுப்பினர் ரூ 2500/-

ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் மேற்படி கட்டணத்தில் பாதித் தொகையை மட்டும் செலுத்த வேண்டும், போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாங்களே நேரில் வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவும், நேரில் பெற்று கொள்ளும் மனுக்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags

Next Story