திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

பைல் படம்.

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு வாட்டர் டேங்க் அருகே பொது கழிப்பிடம் பக்கத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதனுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சா விற்பனை செய்து கொண்டிரந்த ராம்ஜிநகர், காந்தி நகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே போல காந்தி மார்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 20) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காந்தி மார்க்கெட் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags

Next Story