திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
X
திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
By - R.Ponsamy,Sub-Editor |20 April 2022 1:49 PM IST
திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதி பகுதியை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீர் செய்யப்படாமல் இருக்கிறது, பத்தாண்டுகளாக மக்கள் சரியான சாலைகள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக கவனம் செலுத்தி சாலைகளை சீரமைத்து கொடுக்க முழுவீச்சுடன் செயல்பட வேண்டும் என்றும் இந்த
கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu