திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசினார்.
Trichy News- மின்கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 25ம் தேதி காலை 10.00 மணி அளவில் முசிறியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி,மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு(எ) சுப்ரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. டி.இந்திராகாந்தி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக பொருளாளர் சேவியர் மற்றும் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu