திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் இன்று கார்த்திகை மகா தீபம்

திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் இன்று கார்த்திகை  மகா தீபம்
X

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவதற்காக கொப்பரையை பணியாளர்கள் தயார்படுத்தினர்.

கார்த்திகை தீபத்தை யொட்டி திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்தை ஏற்றி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் மெகாதிரி வைக்கப்பட்டு 900 லிட்டர் அளவில் எண்ணெய் ஊற்றும் பணி நடந்த சில தனத்திற்கு முன்பு தொடங்கியது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 19-ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் உள்ள கோபுரத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 600 மீட்டர் நீளமுள்ள பருத்தித் துணியால் பிரம்மாண்ட திரி தயாரிக்கப்பட்டது. இந்த திரியை தயார் செய்து, ஒரு கட்டு போல் கட்டி மேலே தூக்கி சென்று கயிறு கட்டி மேலே ஏற்றி கொப்பரையில் வைக்கப்பட்டது. பின்னர் இந்த பிரம்மாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவை கலந்து 900 லிட்டர் ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கார்த்திகை தீப நாளான இன்று இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடியில் நின்று கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நிற்பார்கள். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்படும் தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து மாலை சரியாக 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

இதற்காக இன்று மாலை தாயுமான சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story