/* */

திருச்சி நகரில் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி துவங்கியதாக ஆணையர் தகவல்

திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி நகரில் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி துவங்கியதாக ஆணையர் தகவல்
X

திருச்சி நகரில் குப்பை மேட்டில் மேயும் பன்றிகள்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தினை உரிய முறையில் பராமரிக்கவும், சாக்கடைக் கட்டுமானங்களை பாதுகாத்து நோய் பரவுவதை தடுக்கவும், மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள் அற்புறப்படுத்தவும், குதிரை மற்றும் பன்றி வளர்ப்பதினை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது திருச்சி மாவட்ட அரசிதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், பன்றிகள் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே திருச்சி மாநகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Updated On: 2 Dec 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?