/* */

திருச்சி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை வைத்தது யார்?

திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலையின் தலையில் இரும்பு கம்பியை வைத்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை  வைத்தது யார்?
X

திருச்சியில் உள்ள பெரியார் சிலை (பைல் படம்)

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. 1967-ஆம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலைக்கு பெரியார் பிறந்த நாள், நினைவு நாள், பெண்கள் தினம் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

திருச்சியில் உள்ள பல்வேறு சிலைகளுக்கு பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்ட போது இந்த பெரியார் சிலைக்கும் இரும்பு கம்பிகளால் ஆன பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைக்கு அருகிலேயே மத்திய பஸ் நிலையம், புறக்காவல் நிலையமும் உள்ளது. இந்நிலையில் இந்த பெரியார் சிலையின் தலையில் யாரோ விஷமி ஒருவர் இரும்பு கம்பியை வைத்து விட்டு சென்றுள்ளார்.

இரண்டு நாட்களாக அந்த இரும்பு கம்பி அகற்றப்படாமல் இருந்தது. இதனை கேள்வியுற்று செய்தி புகைப்பட கலைஞர்கள் அதனை படமெடுத்து உள்ளனர். அப்போது இதனை கவனித்த திருச்சி மாநகர உளவு பிரிவு போலீசார் ஓடி வந்து அந்த இரும்பு கம்பியை பெரியார் சிலையின் தலையில் இருந்து அகற்றி உள்ளனர். இரும்பு கம்பி தடுப்பு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பையும் மீறி பெரியார் சிலையின் தலை பகுதியில் இரும்பு கம்பியை கொண்டு சென்று வைத்தது யார்? என்பது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!