/* */

திருச்சி மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை தெரியும்

திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? என்பது நாளை தெரியும்.

HIGHLIGHTS

திருச்சி மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை தெரியும்
X

கடந்த 1993 ஆம் ஆண்டு வைகோ திமுகவில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் மதிமுகவிற்கு குடை சின்னம் வழங்கப்பட்டது அதன் பின்னர் 2004 நாடாளுமன்ற தேர்தல் முதல் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்போதும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் மதிமுக விற்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வைகோவின் மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் வேட்பாளர் துரைவைகோ செத்தாலும் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உதயன் சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என உணர்ச்சி பொங்க மேடையை தட்டி பேசினார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை கூட்டணியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் வரை சென்றது ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மதிமுக வேட்பாளர் வெற்றி பெற செய்வதற்கான வேலைகளில் திமுகவினர் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதாலும் சின்னம் ஒதுக்கீடு கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்க வேண்டும் என்பதாலும் தேர்தல் ஆணையத்திற்கு பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிடும்படி மதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 9 மணிக்குள் தகவல் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் காரணமாக மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா அல்லது வேறு ஏதாவது பொது சின்னம் தான் ஒதுக்கப்படுமா என்பது நாளை காலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 March 2024 4:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!