திருச்சி மேயருடன் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி நல சங்கத்தினர் சந்திப்பு

திருச்சி மேயருடன் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி நல சங்கத்தினர் சந்திப்பு
X

திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மேயர் அன்பழகனுக்கு ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள மு.அன்பழகனுக்கு நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று காலை திருச்சி மாநகராட்சி 61- வது வார்டு ஜே. கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க சங்கத்தினர் மேயர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சங்க செயலாளர் சங்கர் தலைமையில் சென்ற இவர்கள் மேயர் அன்பழகனுக்கு பொன்னாடை அணிவித்து அவரது மேயர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதில் சங்க துணைத் தலைவர் பொன்னுசாமி, நிர்வாக செயலாளர் குலோத்துங்கன், இணை செயலாளர் ஜெடிக்ஸ், பகுதி செயலாளர்கள் குகன், மன்சூர், முத்துக்குமார், சித்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஜே. கே. நகர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நேரில் வந்து ஆய்வு செய்வதாக மேயர் அன்பழகன் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!