திருச்சியில் வருமானம் இன்றி தவித்த வக்கீல் விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் வருமானம் இன்றி தவித்த  வக்கீல் விஷம் குடித்து தற்கொலை
திருச்சியில் வக்கீலுக்கு படித்தவர் சரியான வருமானம் இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 42). வக்கீலுக்கு படித்து வந்த இவர் சரியான வருமானம் இன்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி கல்பனா (34) கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story