திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ நிலம் வழங்க ஆணை

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ நிலம் வழங்க ஆணை
X

திருநாவுக்கரசர் எம்.பி.

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ நிலத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கடந்த எட்டு - ஒன்பது ஆண்டுகளாக பணி நிறைவு பெறாமல் இருந்தது. இப் பணி நிறைவு பெற இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 0.663 ஏக்கர் நிலம் இதற்காக தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தது. இது நிலுவையில் இருந்தது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். இதற்காக பாதுகாப்புத் துறையின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் பலரையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தினேன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு. ராஜ்நாத் சிங் அவர்களையும் நான்கு முறை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி வந்தேன்.

தற்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களின் மூலமாக இதற்கான அரசு ஆணை இத்துறையால் வெளியிடப்பட்டு நிலுவையில் நிற்கிற இப் பாலத்தின் பணிகள் சம்மந்தமாக வேலை தொடங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்கிற செய்தியை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story