முதுகெலும்பு வளைத்து கம்பு ஊன்றி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

முதுகெலும்பு வளைத்து கம்பு  ஊன்றி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்
X

திருச்சியில் விவசாயிகள் முதுகை வளைத்து, கம்புஊன்றி நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் விவசாயிகள் முதுகெலும்பை வளைத்து கம்பு ஊன்றி நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டுமடங்கு லாபம் தர வேண்டும்.மழையினால் அழிந்து வரும் 10லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியாஅருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அதன் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர போலீசில்அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் போலீசார்உண்ணாவிரதப் போராட்டத்திற்குஅனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.இதைதொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர்,திருச்சி-கரூர் பைபாஸ் ரோடு, மலர் சாலையில் உள்ள அவரது வீட்டில்உண்ணாவிரதப் போராட்டத்தை அக்டோபர் கடந்த 12-ம் தேதி தொடங்கினர்.

நவம்பர் 26-ஆம் தேதி வரை 46நாட்கள் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்20-வது நாளான இன்று முதுகெலும்பு வளைத்து கையில் தடியை ஊன்றியவாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அனைவரும் திடீரென உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து தடியை ஊன்றியவாறு மெயின் ரோட்டை நோக்கி சென்றனர். இதை சற்றும் எதிர் பார்க்காத போலீசார், மெயின் ரோட்டிற்கு செல்வதற்குள் அனைவரையம் தடுப்பு ஏற்படுத்தி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story