திருச்சியில் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி உண்ணாவிரதம்

திருச்சியில் விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி உண்ணாவிரதம்
X

திருச்சியில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சியில், 8-ம் நாளான இன்று விவசாயிகள் தூக்கு கயிற்றைக் கழுத்தில் மாட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 12-ந்தேதி முதல் நவம்பர் 26-ந்தேதி வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 8-ஆம் நாளான இன்று அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காததாலும், சுதந்திர இந்தியாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகளுக்கு பேச்சுரிமை இல்லாமலும், வெளியே நடமாட உரிமை இல்லாமலும் காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறி தூக்கு கயிற்றைக் கழுத்தில் மாட்டி நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில துணைதலைவர் பரமசிவம், மாவட்டத் தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் சுப்பையா பெரியசாமி, குணசேகரன், மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story