திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியாக சுஜித் குமார் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட  போலீஸ் எஸ்பியாக  சுஜித் குமார் பொறுப்பேற்பு
X

திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்றக் கொண்ட சுஜித் குமார்.

திருச்சி மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக ஆக சுஜித்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக சுஜீத் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் தனி பார்வையாக மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மேலும் திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் (மணல் திருட்டு, சட்டவிரோமான அரசு மதுபான விற்பனை, கஞ்சா, குட்கா, லாட்டரி மற்றும் சூதாட்டம்) மற்றும் நிலஅபகரிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

போலீஸ் ஸ்டேசன்களில் வரப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் மனு ரசீது (CSR) அல்லது வழக்கு பதிவு (FIR) கட்டாயமாக செய்யப்பட வேண்டும் என காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுறித்தியுள்ளார். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags

Next Story