/* */

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் தணிக்கை

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தணிக்கை செய்தார்.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் தணிக்கை
X

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட இ. வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாலுகா அலுவலகம் அல்லது அரசு கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அவை உள்ள அறைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை தொடர்ந்து திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று வந்தார்.

அந்த கிடங்கில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கணினி உதவியுடன் ஆய்வு செய்தார். எந்திரங்களின் எண்ணிக்கை தொடர்புடைய ஆவணங்களை தணிக்கை செய்த பின்னர் அந்த அறைக்கு சீல் வைத்து விட்டு சென்றார். அப்போது மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் கே. முத்துசாமி உடனிருந்தார்.

Updated On: 27 Jun 2022 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  3. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  6. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!