/* */

திருச்சி-திண்டுக்கல் இடையே மீண்டும் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

திருச்சி-திண்டுக்கல் இடையே பாசஞ்சர் ரயில் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. அவற்றிலுள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட முன்பதிவு செய்து தான் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து இருப்பதை தொடர்ந்து பல வழித்தடங்களில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி- திண்டுக்கல் இடையே ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து இன்று காலை 6:15 மணிக்கு புறப்பட்ட ரயில் 8. 25 மணிக்கு திருச்சி வந்தடைந்தது. இந்த ரயில் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு சென்றடையும்.இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

Updated On: 8 Oct 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  3. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  4. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  6. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  7. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...