/* */

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 66 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்).

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் ஏர் இந்தியா பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப் (வயது 48) என்ற பயணியின் உடமைகள் சோதனைசெய்யப்பட்டது. அப்போது அவர் வைத்திருந்த கைப் பையில் இருந்து ரூ. 66லட்சம் மதிப்பிலான ஓமன், குவைத், மலேசியா, ரிங்கிட் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை செய்ததில் இந்த பணத்தினை எடுத்து செல்வதற்கு அவரிடம் உரியஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து, அவரிடம் யாருக்கு கொடுக்க பணத்தை கொண்டு செல்கிறார்? யார் இந்த பணத்தை கொடுத்து அனுப்பினார்?இதற்கு முன்பு இது போன்று பணம் ஏதும் எடுத்துசென்றுள்ளாரா?என்பது குறித்து விசாரணைநடத்திவருகின்றனர்.

Updated On: 20 Feb 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...