/* */

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை
X
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு முதன் முதலாக இன்று காலை 6 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். இதற்காக விமான நிலையத்துக்குள் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட பயணியின் சோதனை முடிவு வந்த பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இன்று (புதன்கிழமை) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Updated On: 1 Dec 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!