/* */

திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் யாரும் தங்கம் கடத்தியதாக பிடிபடவில்லை.

இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பிரபாகரன் (வயது 34) என்பவர் கழிவறையில் இருந்து வந்துள்ளார். அப்போது, அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனது உடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், அந்த தங்கத்தை கழிவறையில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து விமான நிலைய கழிவறையில் இருந்த 724.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.35 லட்சத்து 79 ஆயிரம் என்று கூறப்படுகறது.

Updated On: 22 Dec 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி