திருச்சியில் மரம் முறிந்து விழுந்து முதியவர் பலி
X
திருச்சியில் மரம் முறிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.
By - Harishpriyan, Reporter |8 Nov 2021 4:00 PM IST
திருச்சியில் மரம் முறிந்து விழுந்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சி வரகனேரி பென்ஷனர் தெருவை சேர்ந்தவர் மகாமுனி (வயது 70). இவர் பா.ஜ.க. நிர்வாக குழு உறுப்பினராக உள்ள ராவணன் வீட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அந்த பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து அவர் மீது விழுந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu