திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருச்சி மண்டல 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல்படம்)

திருச்சி மண்டலத்தில் உள்ள 30 பேரூராட்சிகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 30 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, உதவி இயக்குனர் காளியப்பன், அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture