விவசாயிகள் மண்டியிட்டு மன்றாடுவது போன்று இன்று 31-வது நாள் உண்ணாவிரத போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் மண்டியிட்டு உண்ணா விரத போராட்டம்.
திருச்சியில், அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மண்டியிட்டு மன்றாடுவது போன்று இன்று 31-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்இ46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து கடந்த 30 நாட்களாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் 31-ம் நாளான இன்று மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு தராததால், விவசாயிகள் முட்டிபோட்டு மத்திய அரசிடம் மன்றாடும் நூதன உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் மேகராஜன், தட்சணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் ஜான் மில்கியராஜ், தியாகு மாநில துணை சட்ட ஆலோசகர் முத்துசாமி, செய்தி தொடர்பாளர்கள் பிரேம்குமார், வரப்பிரகாஷ் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu